2012...
பல பாடங்களை
நமக்கு நடத்திவிட்டு
நகர்ந்து கொண்டது....
நல்லவையும் தீயவையும்
கலவையாய் சேர்ந்து
கடந்து தான் விட்டது....
நீரில் எழுதிய
கோலமாய்
நிர்மூலமாகி விட்டது...
கடந்து சென்ற காலத்திடம்
கற்று கொண்டு
கற்றதை பயிற்றுவித்து
நம்பிக்கையுடன் நகர்ந்திடுவோம்
2013ஐ நோக்கி....
ஒரே ஒரு உறுதி மொழி....
மனிதத்தை மரணிக்க
ஒரு போதும் அனுமதியோம்...
சூளுரைத்து விட்டு
எதிர் கொள்வோம்
புது வருடத்தை!!
உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் என் இனிய புத்தாண்டு வாழ்த்துகள்.
ReplyDelete2013ல் உங்கள் நம்பிக்கைகளும் ஆசைகளும் கனவுகளும் கைகூடட்டும்
அன்புடன்
மதுரைத்தமிழன்
தங்கள் வாழ்த்துகளுக்கு நன்றி... தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினருக்கும் உளம் கனிந்த நல் வாழ்த்துக்கள்..
ReplyDeleteஅன்பின் ஷங்கர் - அருமையான கவிதை - இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா
ReplyDelete