மறக்கவும் நினைக்கவும் ஒரே சமயத்தில் முடியுமா ?
அதைத் தான் செய்ய முயன்று பல முறை தோற்கிறோம்!!
விட்டத்தைப் பார்க்கும் பொழுதெல்லாம் நம்மிடம் விடையிருப்பதில்லை….
நம் நினைவுகள் வெளிக்கொணரப் படுகிறது!!
காதலை நம்மிடமே இருக்கிறது என்பதை மறந்துவிட்டு எங்கோத் தேடுகிறோம்….
அந்த தேடலின் பயன்….தனியாக அமர்ந்து முரனான செயலை செய்ய முற்படும் போது வெளிவருகிறது….காதலின் மறுபக்கம் வெளிப்படுகிறது.
விலகியிருக்க விரும்புகிறேன் என்று சொல்லும்போது,
கண்ணீரில் காதலை கரைக்க முற்படும் போது,
இதயத்தின் சொந்தத்தை உதைத்துத் தள்ள எண்ணிய போது
நம்மை நாமே எப்படி மறக்க முடியும் என்று யோசிக்கத் தவறிவிடுகிறோம்…
அதனால் தான்
முரன் தோல்வியடைந்தது…..
மற்றொரு முறன் மனதினுள்…..கோபம் சினேகமாய்!!
தெரியாமல் தேடினோம்….
தேர்வில்லாமல் தெரிந்து தெளிந்தோம்…..காதல் என்றால் என்னவென்று….
மறக்க நினைத்த நினைவுகள் மரமாய் நம்முள் வேரூன்றி நின்றதும் காதல் தானே தோழர்களே!!
முரனின் திரட்சியைப் பார்த்தீர்களா?
மறக்க நினைக்கும் நினைவுகள் அழிவதில்லை!!
முடிந்த வினாடி மட்டுமல்ல….நிகழும் இந்த வினாடி வரை (எப்போது படித்துப் பார்த்தாலும் நிகழும் வினாடி மாறுவதில்லை!!) நினைவுகளை மறக்க முடியாது…நினைவுகள் மறிக்க மறுக்கும்….
நேசித்தல் புரியப்பட்டு விட்டது….
சொல்லித் தெரிவதில்லை காதல்….
சொன்னால் இன்னும் மிளிர்வடையும்!!
No comments:
Post a Comment