நான் கோபிநாத்தின் ரசிகன்......ரசிகன் என்பதால், சில நிகழ்வுகள் வருத்தப்பட வைக்கிறது. இன்றைய நீயா நானா பார்த்துக் கொண்டிருக்கும் பொழுது எழுத தோன்றியது...எழுதுகிறேன்!
கனவினைப் பற்றிய பகிர்வு. நல்ல தொடக்கம். கனவினை எப்படிப் பார்க்கிறீர்கள் ? கனவுக்கு பலன் உள்ளதா? நூதனமான பகிர்வு....
பாதித்த விஷயம் - ஒரு பெண் தனக்கு ஏற்பட்ட ஒரு கனவினையும் அது தன் வாழ்க்கையும் பாதித்ததையும் சொல்ல அதற்கு அந்த அணியினர் கைதட்டியதும் என்னால் ஒத்துக் கொள்ள முடியவில்லை. அந்த பெண் தன் வாழ்வில் நடந்த சோகமான சம்பவத்தை சொல்லுகிறாள்....நிகழ்ச்சியை பார்த்தவர்கள் relate செய்ய முடியும். இது சரியா?
ஒருவர் பேசும் போது, அந்த கனவிற்கு ஒரு விளக்கம் கொடுத்தார். அந்த விளக்கத்தினால், அந்த பெண் காயப்பட்டு உணர்ச்சி வெள்ளத்தில் பொங்கி பேச, அதற்கும் கைதட்டல்...
இந்த கைதட்டல் தேவை தானா??? மனம் வலித்தது. கோபிநாத் எப்படி அனுமதிக்கலாம் ? அந்த பெண்ணின் வேதனையை எத்தனை பேர் புரிந்து கொண்டார்கள் ? சொல்ல வந்தது - கனவினில் வரும் சம்பவத்தை உதாசீனப்படுத்தாதீர்கள் என்று மட்டுமே....ஹெல்மெட் போடும் போது strapஐயும் போடுங்கள் என்று சொன்னார்கள்....நன்றி !!
ஆனால் தயவு செய்து, இந்த மாதிரி கருத்துக்கள் வரும் போது கை தட்டாமல் இருக்கலாமே....
இந்த பதிவினை கோபினாத் பார்ப்பாரா என்று தெரியாது.....ஆனால், இந்த செயலை, தொலைக்காட்ச்சியில் வருவதை தடுத்திருக்கலாம் என்பது என் கருத்து.....