புருவம் உயர்ந்தது
புன்னகை பதிலானது
புரிபடாத விஷயம்
பேசப்படும் சமயம்....
கூரான செவி
சீரான மனம்
தெளிவான பார்வை
புரிதலுக்கு உதவும்!
எனக்கும் தெரியும்
எனக்கு மட்டுமே
எனும் பொழுது
மூடிவிடுகிறாய் அறிவை!
தனக்கு தெரியும்
தள்ளி நிற்பவனுக்கு
தயக்கம் ஏன் ஏற்றுகொள்ள ?
துடி துடிக்கிறாய்!
அவனை நீயாக்கும் முயற்சி
தீங்கில்லை என்றாலும்...
உன்னை அவனாக சொன்னால்
நான் அவனில்லை என்கிறாயே!
நீ நீயாக இருந்து
அறிவை உறுதுணையாக்கி
ஆரூடம் பார்க்காமல்
மனதை திற!
மலர்ச்சி தேவை
மறுபடியும் மறுபடியும்!
மானிடனாய் வாழவும்
மனிதம் நிலைக்கவும்!!
நல்ல வரிகள்... பாராட்டுக்கள்...
ReplyDelete/// மலர்ச்சி தேவை
மறுபடியும் மறுபடியும் !
மானிடனாய் வாழவும்
மனிதம் நிலைக்கவும் !! ///
அருமையாக முடித்துள்ளது சிறப்பு...
தொடர வாழ்த்துக்கள்... நன்றி...