Monday, December 31, 2012

புத்தாண்டு 2013...!!



2012...

பல பாடங்களை
நமக்கு நடத்திவிட்டு
நகர்ந்து கொண்டது....

நல்லவையும் தீயவையும்
கலவையாய் சேர்ந்து
கடந்து தான் விட்டது....

நீரில் எழுதிய
கோலமாய்
நிர்மூலமாகி விட்டது...

கடந்து சென்ற காலத்திடம்
கற்று கொண்டு
கற்றதை பயிற்றுவித்து

நம்பிக்கையுடன் நகர்ந்திடுவோம்
2013ஐ நோக்கி....

ஒரே ஒரு உறுதி மொழி....

மனிதத்தை மரணிக்க
ஒரு போதும் அனுமதியோம்...

சூளுரைத்து விட்டு
எதிர் கொள்வோம்
புது வருடத்தை!!

 

Tuesday, December 11, 2012

முதுகெலும்பில்லா மூடர்கள்


தவறு செய்யவதே
தலையாய கடமையாய்
கருவிலிருந்து
நினைவில் நிறுத்தி
ஜனிக்கும் உயிர் ?
இல்லை… இல்லை…

சூழ்நிலை சுற்றியிருந்து
சுகித்திருக்க முடியாததால்
அடுத்தவருக்கு அநியாயம்…
விரலை தன் பக்கம்
நீட்டிட அச்சம் கொண்டு
சாடிடுவார் சமூகத்தை…

தன்னுடைய நிலமைக்கும்
சூழும் நிலையை
காரணியாக்கும்
முதுகெலும்பில்லா மூடர்கள்
மொத்தமாய் முடங்கிட்டால் ??
எதிர்பார்ப்புடன் மனிதம்…