Tuesday, December 11, 2012

முதுகெலும்பில்லா மூடர்கள்


தவறு செய்யவதே
தலையாய கடமையாய்
கருவிலிருந்து
நினைவில் நிறுத்தி
ஜனிக்கும் உயிர் ?
இல்லை… இல்லை…

சூழ்நிலை சுற்றியிருந்து
சுகித்திருக்க முடியாததால்
அடுத்தவருக்கு அநியாயம்…
விரலை தன் பக்கம்
நீட்டிட அச்சம் கொண்டு
சாடிடுவார் சமூகத்தை…

தன்னுடைய நிலமைக்கும்
சூழும் நிலையை
காரணியாக்கும்
முதுகெலும்பில்லா மூடர்கள்
மொத்தமாய் முடங்கிட்டால் ??
எதிர்பார்ப்புடன் மனிதம்…

2 comments: