Monday, August 27, 2012

முயற்சி!!


பிறக்கும் போது
பிறை தான்
நிலவு நானும்...

நாளொரு மேனி
பொழுதொரு வண்ணம்
நம்பிக்கை நங்கூரமாய்
நிலவு எனக்கு!!

முழுமை பெற்றிட
பித்தலாட்டம் புனைந்து
பதினைந்து நாட்களை
பாதியாக்குவதில்லை நான்….
முறை தானே?

முயற்சியோடு வளரும்
பிறையாம் என்னை
பார்க்கும் மனிதம்
தனக்கு மட்டும் தனிவழி....
பிழை தானே??

வரிசையில் நிற்கையில்
சாலையில் செல்கையில்
கூட்ட நெரிசலில்
எங்கெங்கு நோக்கினும்
எரிச்சலில் என்னவர்கள்.....

ஏனடா மானுடா
என்னைப் பார்த்தாவது
என தொடங்கினால்
நிலவே உனக்குப் போட்டியில்லை
எங்களுக்கு அப்படியா ?
அதிர்ந்தேன்….

போட்டியிடு மனிதமே
பொறாமை வேண்டாம்
வளர்ச்சி தேவை தான்
பயிற்றுவிக்கப்பட்ட முயற்சியோடு
என்று விளங்கும்........??

3 comments: