Tuesday, May 15, 2012

பெண்சிசு....


இருவர் இருளில்
இன்புற்றிருந்த இருநொடிகள்
கருவாய் நான்……
இருக்கிறேன் என்பதனை
இனியவள் உணர
இருபத்தெட்டு நாட்கள்!
உள்ளேன் என்பதனை
உறுதி படுத்த
உதிரத்தின் சான்று!
தாய்மை உணர்வு!!
மகிழ்ச்சியின் ஊற்று!!
ஐயிறுத் திங்கள்
ஐயத்துடன் நான்….
இருட்டின் சூழலிலே
குருட்டு வாழ்வு!
முதல் சுவாசிப்பு
முழுமையாக முடிக்கும் முன்
ஏதோ பார்த்துவிட்டு
ஏதேதோ பேசினார்கள்….
கல்லறையில் நான்….
கண்ணீரில் தாய்மை!!


7 comments:

  1. அன்பின் ஷங்கர்

    அருமையான சிந்தனை - ஏதோ பார்த்து விட்டு ஏதேதொ பேசி - கல்லறையில் பெண் சிசு - கண்ணீரில் தாய்மை- இன்றைய நிலை இது தான்.......

    நல்லதொரு கவிதை - வாழ்க வளமுடன் - நட்புடன் சீனா

    ReplyDelete
  2. கண்ணீரில் தாய்மை என்னும் இடத்தில் மனம் கனத்துப் போனதை மறுக்க முடியவில்லை அண்ணா!!!

    வலியே வார்த்தைகளாகி இருக்கிறது.

    ReplyDelete
  3. பின்னூட்டத்திற்கு நன்றி....ஆமிர்கானின் 'சத்யமேவ ஜயதே' என்ற நிகழ்ச்சியை பார்க்க நேர்ந்தது. அதில் பேசிய தாய்மார்கள், பெண் சிசு என்பதனால் 4-5 குழந்தைகளுக்கு பிறக்கும் முன்னரோ பிறந்த பிறகோ பிரியா விடை கொடுத்திருக்கிறார்கள் என்பதை கேட்டு வந்த வலி.....:(.

    ReplyDelete
  4. இப்படிப்பட்ட சமுதாயத்தில் பிறந்து, வாழ்ந்து, மடிந்துபோவதற்கு..

    பிறப்பிலேயே இறப்பு என்பது நல்ல விஷயம் தான்..!!

    அதோடு, எந்த கருவும் கண்ணீர் விட்டு அழுது நான் பார்த்ததில்லை.. வளர்ந்தவர்கள் தான் அதற்காக அனுதாபப்படுவதும், ஆத்திரப்படுவதும்,துக்கப்படுவதும், துயரப்படுவதுமாய் ஸீன் காட்டுகிறார்கள்..

    எப்படியும் ஒருநாள் போய்சேரத்தானே போகிறது..அது அத்தனை வருடம் கழித்து நடந்தால் என்ன? உடனே நடந்தால் என்ன?

    ReplyDelete
  5. ரங்கா - எப்படிடா யோசிக்கறெ இப்படி எல்லாம் - நட்புடன் சீனா

    ReplyDelete
  6. உலகத்தை முழுதாய் புரிந்து கொண்டால்.. சூழலை உணர்ந்துகொண்டால் தான் உலகை பிரியும் போது துக்கம் கொள்ள தோன்றும்..!

    அந்த சின்னஞ்சிறு பிஞ்சு அந்த உலகை அறியும் முன்னே அழிக்கப்படுகிறது. 10 மாத இருட்டு உலகு போல அதற்கு இதுவும் ஒரு உலகு தான்..!

    மனிதர்கள் யாரும் இப்படியான வேலையை செய்யமாட்டார்கள்.. மனிதர்களாய் அல்லாதவர்கள் என்றைக்குமே திருந்த மாட்டார்கள்..! மிருங்கங்களாகிய இது போன்றவர்களிடம் பிடிக்காமல் அந்த பெண் குழந்தை வாழ்வதோடு மடிவது என்பது எவ்வளவோ மேல்......


    //கண்ணீரில் தாய்மை!!//

    கருங்கல்லாய் தாய்மை என்பது சிறப்பாக இருக்கும் என்று கருதுகிறேன்...!( ஊர் பக்கம் ஆண்களை விட பெண் சிசுக்களை கொல்ல ஆயுத்தம் ஆகும் எத்தனையோ பெண்களை பார்த்திருக்கிறேன்.)

    ReplyDelete