Monday, May 7, 2012

காவியத்தின் ஓவியம்!


நினைவுகள் நெஞ்சோடு

கனவுகள் கண்ணோடு

நெஞ்சோடும் கண்ணோடும் நெகிழ்ந்து

வாஞ்சையோடு வஞ்சி உனை

நித்தம் நிகழ்வினில் நிறுத்த விளைந்தேன்….

கேள்வி எழுந்தது – ஏன் ?

வேள்வி வலுத்தது – பதில்….

பின்னூட்டமாய் பித்தம் வேண்டாம் என

கண்ணும் கருத்துமாய்

காலத்திற்கு காத்திருந்து

காதலை காவியமாக்கினேன்…..

காவியத்தின் ஓவியம் – நீ!!

1 comment:

  1. காவியத்தின் ஓவியம் நீன்னு....செமய முடிச்சு இருக்கிங்கண்ணா...!

    காதலில் மனம் அமிழ்ந்து காதலோடு காதலனாவனாக நீங்கள் இருப்பதுதான் இப்படியான படைப்புகள் பிறக்க காரணம்.

    ReplyDelete