நினைவுகள் நெஞ்சோடு
கனவுகள் கண்ணோடு
நெஞ்சோடும் கண்ணோடும் நெகிழ்ந்து
வாஞ்சையோடு வஞ்சி உனை
நித்தம் நிகழ்வினில் நிறுத்த விளைந்தேன்….
கேள்வி எழுந்தது – ஏன் ?
வேள்வி வலுத்தது – பதில்….
பின்னூட்டமாய் பித்தம் வேண்டாம் என
கண்ணும் கருத்துமாய்
காலத்திற்கு காத்திருந்து
காதலை காவியமாக்கினேன்…..
காவியத்தின் ஓவியம் – நீ!!
காவியத்தின் ஓவியம் நீன்னு....செமய முடிச்சு இருக்கிங்கண்ணா...!
ReplyDeleteகாதலில் மனம் அமிழ்ந்து காதலோடு காதலனாவனாக நீங்கள் இருப்பதுதான் இப்படியான படைப்புகள் பிறக்க காரணம்.