Sunday, April 29, 2012

எதிர்பார்ப்பு....


காத்திருக்கும் பொழுதுகள்…..எதிர்பார்ப்பு!

பிடித்தவரின் வருகையை எதிர்பார்த்து

பித்தம் பிடித்து

பிரிவில் பினைந்து

பார்வை பதித்தாலும்

காணும் கண்ணில்

கவனம் கலைந்து

கருவைத் தொலைத்து

எல்லாவற்றிலும் எரிச்சல்….

எதிர்பார்ப்பு நிறைவேறும் வரை!!



தேடிய தென்றல் அருகில் வந்தபின்

தேன் மொழியாய் வார்த்தையை எதிர்பார்த்து

தேகம் தொலைத்து

தேவையில் தோய்ந்து

தாக்கம் தகித்தாலும்

செவிக்கும் சொல்லில்

சலனம் சிதைந்து

செய்வது அறியாது

எல்லாவற்றிலும் எரிச்சல்….

எதிர்பார்ப்பு நிறைவேறும் வரை!!

நினைத்தது நடந்ததும்

நினைவுகள் நிறைந்தது!

நித்தம் நிம்மதி….இனி….

இருவருக்குமே எனும் போது!!


4 comments:

  1. தமிழ்க்காதலை எதிர்பார்ப்பில் உணர்ந்தேன்
    மனம் கவர்ந்த பதிவு
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
  2. நல்ல முயற்ச்சி வாழ்த்துகள், எதிர்ப்பார்ப்புகள் இல்லை என்றால் வாழ்க்கையே ஒன்றும் இல்லாமால் ஆகிவிடும், எதிர்ப்பார்ப்புகள் வேணுமானால் ஒவ்வொருவருக்கும் வேறமாதிரி இருக்காலாம்.

    ReplyDelete
  3. பின்னூட்டத்திற்கு நன்றி சிவானந்தம்...

    ReplyDelete