Sunday, April 8, 2012

காதலும் முரணும்!!


பழகத் தொடங்கி சில வருடங்கள் முடித்ததற்கு பெருமூச்சு விடுகிறோம் ?? ஏன் என்று யோசித்துப் பார்த்தால்…

காதல் என்ற வார்த்தைக்குள் சிக்காமல் இத்தனை நாட்கள் கடந்துவிட்டோம் என்பதாலா ? இல்லை!! நம் உள்ளத்துக்குத் தெரியும்….காதலுக்குள்ளேயே வாழ்ந்துவிட்டு ‘நான் சொல்லவில்லையே’ என்ற ஆனந்தம் ஒரு புறம் ; சொல்ல முடியவில்லையே என்ற ஆதங்கம் மறுபுறம்!

முரண்கள் இல்லாத பழக்கம் இருந்ததற்கு எத்தனை கடினமாய் உழைத்திருக்கிறோம் ? காதலை சொல்லாமல் இருந்ததற்கு அதுவும் ஒரு காரணமாய் இருந்திருக்கும். எத்தனை முறை மனம் ஒவ்வாமல் ஆமாம் சொல்லியிருக்கிறோம் ? இதுவும் நமக்கு மட்டுமே தெரியும். நட்பாய் இருந்திருந்தால் கண்டிப்பாய் முரண்கள் இருந்திருக்கும். அதனால் தான் பல நேரம்.காதலையும் நட்பையும் தொலைத்துவிட்டு பிறந்த புதியதோர்………. பெயர் தெரியாத ஒன்று,,,, என்று மனம் தவிக்கிறது.

பெண்ணின் ஞானத்தை உள்வாங்கும் போது, அந்த பெண்ணையும் உள்வாங்கி நம்முள் நிறைக்கிறோம் ; நாமும் நிறைந்து போகிறோம்…..இது தான் காதல்! நம்முள் நிறைந்த அந்த பெண், நம்மைக் கரைத்து, நம்முள் இருக்கும் கற்பனைச் சிறகுகளையும் விரிக்கச் செய்கிறாள் ; நமக்குள் இருக்கும் கற்பனையையும் உணர்த்துகிறாள்…..இது தான் காதல்!

யார் கதைகள் சொன்னாலும், கவிதைகள் சொன்னாலும், அது நன்றாக இருந்தால், நம்மை மூர்ச்சையாக்கும். ஆனால், நமக்குள் கதைகள் பேசாது காதலாய் இருந்திராவிட்டால். சொல்லாமல் இருப்பது சுகம் ; சொன்னாலும் சுகம் --- இது காதல் மட்டுமே!!

நேசித்தலை சொல்லாமலே நேசிக்கும் வித்தை நாம் கற்றுக் கொண்டோம். அந்த வித்தைக்கு விளக்கம் என்ன என்று ஒரு வார்த்தையில் சொல்ல முடியுமா ? மௌனங்களால் பல மொழிகள் பேசலாம். ஆனால், அடுத்தவருக்கு எந்த அளவில் புரியும் ? சொல்லப்படுபவருக்கு, முழுவதுமாக புரியும் மௌன மொழிக்கு பெயர் தெரியும் நமக்கு…..காதல் அன்றி வேறென்ன ??

வாழ்வியல் உண்மைகள், காமத்தின் வரைமுறைகள், வரைமுறையில்லா உறவு – இவை அனைத்திற்கும் ஒரே பெயர் காதல்!! அறிதலும் புரிதலும் காதல்!!

நீ பேசும் போது, பலர் அதனை உள்வாங்கலாம் ; ஆனால் ஒருவரால் மட்டுமே அதற்கு பதிலாய் வாய் பேசாமல், கண்களினால், நீ மட்டுமே புரிந்து கொள்ளும் வகையில் ஒரு உணர்வு பாய்ச்சமுடியும், அது காதல்!!

மௌனத்தில் நிறைந்த சப்தமான உணர்வுகள் – குரு – சிஷ்யன் உறவில்லை ; நட்பில்லை ; எதையும் தொலைத்து விடவும் இல்லை ; அது காதல்!!

நாம் உணர்ந்து விட்டோம் ; ஆனாலும் அந்த உறவிற்கு பெயர் தேடுகிறோம் ; இல்லை – தேடுவது போல் நடிக்கிறோம். அந்த நடிப்பும் காதல் தான்!!

No comments:

Post a Comment