Sunday, April 15, 2012

உணர்வும் காதலும்!

மணி....ஓசை எழுப்புவதில்லை
அடிக்கும் வரை!

கல் சிற்பம் ஆவதில்லை
செதுக்கும் வரை!

எழுத்துக்கள் வார்த்தை ஆவதில்லை
ஒன்றாகும் வரை!

வார்த்தைகள் படைப்புகள் ஆவதில்லை
படைக்கும் வரை!

கற்பனைகள் உண்மை ஆவதில்லை
உழைக்கும் வரை!

உணர்வுகள் காதல் ஆவதில்லை
சொல்லும் வரை!

1 comment:

  1. கடைசி லைன்ல சிக்ஸர் அடிச்சுட்டீங்க அண்ணா...!

    சொல்லாத காதல் உணர்வுதான்..காதல் ஸ்தூலமெனில் அதன் சூட்சும ரூபம்தான் உண்வு...

    மிக அருமை....தொடரட்டும் உங்களின் காதல் பயணம்....!

    ReplyDelete