Thursday, April 12, 2012

ஆதலினால் காதல்....


கனவில்…
காதலை கண்களால் கவித்து
களவு கொடுத்த மனதோடு
கசடற இருந்தேன்….
ஆனால் சுகமாய் இருந்தேன்!

நிஜத்தில்…
நினைவுகளை நெஞ்சோடு நிறுத்தி
நின் எண்ணத்தில் மயங்கி
நிறைவாய் இருக்கிறேன்….
சுகமாய் இருக்கிறேன்!

நடப்பது என்ன? - நிகழ்வு....காதலால் ஆன நினைவுகள்
நடந்தது என்ன? - நினைவுகளுக்கு ஆதாரமான காதல்
கனவும் நிஜமும்
கண்டிப்பாய் வாழ்வில் உண்டு….
கனவை நிஜமாக்கு….
நிஜத்தில் கனவை கல
காதலை நிறைவு செய்ய நினைவுகள் அவசியம்….
நினைவுகள் காதலின் எதிரொலி
நிஜம் நினைவுகள் நிறைந்தது!
ஆதலினால் காதல்.....

No comments:

Post a Comment