Monday, April 9, 2012

அறிதல்....புரிதல்....

அறிதலும் புரிதலும்
புரிதலும் அறிதலும்
எது முதலில் வருகிறது ?

ஒருவரை அறிந்ததால் புரிந்து கொள்ள முயற்சி செய்கிறோமா?
அல்லது
புரிந்து கொண்ட பிறகு அறிய முற்படுகிறோமா?

நட்போ,
காதலோ,
தெரிந்தவர்களோ,
அறிந்தவர்களோ,
உறவினர்களோ,
அந்நியரோ
அறிமுகம் ஆனதும்
அறிவுக்கு எட்டாமலே
அறிந்து கொள்ளவும்
புரிந்து கொள்ளவும்
(எது முதலில்.....என்ற ஆராய்ச்சி இன்றி)
முற்படுகிறோம்!!

பலரை அறிகிறோம்
பலரை புரிகிறோம்
ஒரு சிலரிடம் மட்டுமே
அறிதலுக்கும் புரிதலுக்கும் உகந்த படி
செயல் படுகிறோம்....

அவர்களுடனான உறவு நிலைத்து நிற்கிறது.

நம் செயல்பாடு மாறாத பொழுது
இடைவெளி விரிவடைகிறது!

அவனை எனக்குத் தெரியும் ; அவன் இப்படித் தான் ; அவள் இப்படித் தான்....
என்று கூறும் நாவிற்கு
நான் ஏன் இப்படியே இருக்கிறேன் ?
என்ற கேள்விக்கு பதில் சொல்ல முடியாது ; தெரியாது....

உறவு நிலைப்பது நம்மால் மட்டுமே!!
அறிதல், புரிதல், அதன் படி நடந்து கொள்ளுதல்....
இவை போதுமே நல்ல உறவிற்கு....
மனித நேயத்தை காப்பதற்கு....!

2 comments:

  1. உறவைத் தொடரும் முன் அடுத்தவர் பற்றிய அபிப்ராயத்தை விட தான் எப்படி செயல்படுகிறோம் என்று உணர்ந்து நடந்தால்...

    உறவு மேம்படும்...!

    பெரும்பாலனவர்கள் இதை உணராமத்தால் உறவுகளை சிக்கல் ஆக்கி வைத்திருக்கின்றன..!

    அருமையான எண்ணம் அண்ணா!

    வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  2. நன்றி தேவா....

    ReplyDelete