Wednesday, April 18, 2012

கருத்து.....


அடுத்தவருக்கு அள்ளி வீச

ஆணித்தரமாய் கருத்துக்கள்

இச்சை இவையாவிலும்

ஈடுபட தோன்றாமல்…..

உனக்கு சிக்கல் என்றால்

ஊமையாக,

எட்டி நின்று

ஏதாவது கேள்வி கேட்டு

ஐயோ பாவம் மட்டும் சொல்லி

ஒருவருக்கும் பலனில்லாமல்

ஓரளவிற்கும் மனித நேயமில்லாத மனிதனுக்கு

ரௌத்திரம் பழகு போன்ற கருத்துக்கள் எதற்கு ?

1 comment:

  1. ஓரளவிற்கும் மனித நேயமில்லாத மனிதனுக்கு

    ரௌத்திரம் பழகு போன்ற கருத்துக்கள் எதற்கு ?

    மன நிம்மதி இழக்கத்தான்
    மனம் கவர்ந்த பதிவு
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete