Sunday, April 8, 2012

காதலும் கோபமும்!!


கோபமும் காதலும் முரனா ? முரன் தான் என்று தொடங்கி ஏன் முரனில்லை என்று நமக்கு நாமே சொல்லிக்கொண்டு….கடைசியில், முரன் தான்…அது தவறு தான் என்று ஒரு முடிவுக்கு வருகிறோமே, தெளிவு பெறுகிறோமே…..அது காதல்!!

அனைத்து உணர்வுக்கும் ஒரு வடிவம் உண்டு. அந்த வடிவம் வார்த்தைகளாகவோ, காதலாகவோ, கோபமாகவோ, எரிச்சலாகவோ, மகிழ்ச்சியாகவோ, வருத்தமாகவோ இருக்கும்…..உணர்த்தப்பட வேண்டியது உணர்வு. நீ உனக்கள்ளோ, அடுத்தவருக்கோ அதை உணர்த்த வேண்டும். உணர்த்த முற்படும் போது, கொஞ்சம் மிகைப் படுத்துகிறோம்…சில உரிமைகளை எடுத்துக் கொள்கிறோம்….பல நேரங்களில் தளர்ந்து போகிறோம் – தவிப்பினால்.

இதில் எது செய்தாலும், செயல் முடிந்த பிறகு, நினைத்தது நடக்காமல் போகும் போது, காரணங்களை ஆராயத் தொடங்குகிறோம்…..தெளிவு பிறக்கிறது. தடையில்லாமல் சிந்திக்க வைப்பது காதல்….சிந்திப்பதை வெளிக்கொணர்வதில் குழப்பம்….அப்போது தான், நம்முள் இருக்கும் நல்லவற்றை மட்டும் வெளிப்படுத்துகிறோம்…..சில சமயங்களில் உணர்வு உண்மையாய் வெளிப்படும் போது, வெளிப்படுத்திய பிறகு - யோசிக்கிறோம்!!

அதீத காதலின் வெளிப்பாடு, கோபம். இதனை அறியாமல், பல நேரங்களில் தெரிந்தும் தெரியாமலும் இரெண்டையும் மோதவிடுகிறோம்….காதல் என்கிற பிரம்மாண்டம் சில நேரம் வெற்றியடைகிறது. பல நேரம் கோபம் நிலைக் கொண்டுவிடுகிறது. இதற்குக் காரணம், நாம் எடுத்துக் கொள்கிற அளவுக்கு அதிகமான உரிமை ; அல்லது அந்த உரிமை புரிந்துக் கொள்ளப்படாமை….

அனைவரிடமும் நாம் உரிமை எடுத்துக் கொள்வதில்லை….புரிதலுடன் கூடிய உரிமை, காதலாகிறது. சில சமயங்களில், வெளிப்படுத்தப்படும் கோபமும் புரிதலுக்கு உதவி செய்கிறது. அந்த புரிதல் காதலின் உருவெடுக்கிறது.

காதல் என்ற உணர்வு அனைவரிடமும் இருக்கிறது….அதை எந்த அளவில் வெளிப்படுத்துகிறோம்….எப்படி வெளிப்படுத்துகிறோம்….யாரிடம் வெளிப்படுத்துகிறோம்…..எப்பொழுது வெளிப்படுத்துகிறோம்…..இவை தான் புரிதல்….காதலின் அடுத்தப் பரிமானம்.

ஒவ்வொரு நாளும் காதல் வளர்ச்சியடைகிறது….புரிதல் அதிகமாகிறது. கெஞ்சி கிடைப்பதல்ல காதல்…உள்ளே இருக்கும் உணர்ச்சியை புரிந்து கொண்டு, தெளிவாக வெளிப்படுத்துதல், புரியும் படியாக வெளிப்படுத்துதல் – காதல்.

No comments:

Post a Comment