Wednesday, April 11, 2012

காதலாகவே நில்!

காதல்.....

ஒவ்வொரு மனிதனிடமும் அந்த உணர்வு உண்டு.
சில சமயங்களில் காதல் வெளிப்படுகிறது.
பல சமயங்களில்
அடைந்துப் போகிறது....

சொல்ல சொற்களின்றி,
வெளிப்படுத்த விவேகமின்றி,
சரியான சமயமின்றி....அடைக்கப் படுகிறது....

அடைந்து போகும் பொழுதுகளிலெல்லாம்
அவச் சொல்லுக்கு
அபயம் அளித்து
அறுவடை செய்ய முடியாமல்
காதலை, களையெடுப்பது போல,
கலைத்து விடுவதாக, கலைந்து விட்டதாக
கருதி, கரைந்துவிடுகிறோம்.....காதலிலேயே!

வடு மறைவதில்லை...
வருங்காலத்திலும்,
வந்த வசந்தம்
வந்தேன் சென்றேன் என்று செல்வதில்லை.

நினைவுகள்
நிலவு போல
நிலைத்து நிற்கும்....
அமாவாசையில்லாத நிலாவாய்
தேயும் நிலா மீண்டும் வளரும் ;
நினைவுகள் மொத்தமாய் நிறைவடைவதில்லை....

நினைவுகள்
காதல் என்ற உணர்வை
அழியாமல் பாதுகாக்கும்
நிகழ்வு....
நிகழ்வென்பதால்
நிகழ் காலமாகவே காதல்....

காதலை
பிற உணர்வுகளால்
புறம் தள்ள
பிரயத்தனப்பட்டு
பிராயங்கள் ஆனாலும்
பின்னடைவு காண்கிறோம்....

போர்வைகள் பல
போர்த்தினாலும்
போராட்டம் பல செய்தாலும்
போற்றும் உணர்வு வேறெதாக இருந்தாலும்
காதலை மறைக்க முடியாது....
வெளிப்படுத்தத் தயங்கினாலும்
வென்றிடும்.....

அழியாதது அண்டத்திலே...
அழிக்க முடியாதது அகிலத்திலே...
அருகாமையில் இருக்கும்....
அன்றாடம் வளரும்....

காதலாக மாறி
காதலாகவே நில்....!

No comments:

Post a Comment