Wednesday, October 17, 2012

உள்ளிருக்கும் உன்னை...


மயக்கத்தில் திளைத்திருந்த
ஒவ்வொரு நொடியிலும்
மதியினில் மதி…

ஆண்டில் பனிரெண்டுமுறை
பிரபஞ்சம் பார்க்கும்
விண்மீனின் நடுவே
இளைப்பாறும் அம்புலியை
நித்தம் நோக்குகிறேன்
மனதோடு மனதாக!!

கண்களைத் திறந்தாலும்
காட்சியில் நீ வேண்டி
தீராத வேள்வி
விழி மூடி…

மனதில்லை...
இமை திறந்து
தவத்தை கலைத்திட..
உள்ளிருக்கும் உன்னை
உள்நோக்க
மூடியே இருக்கட்டும்
முன்னிரெண்டு கண்கள்!!
 
 

3 comments:

  1. மனதில்லை...
    இமை திறந்து
    தவத்தை கலைத்திட..
    உள்ளிருக்கும் உன்னை
    உள்நோக்க
    மூடியே இருக்கட்டும்
    முன்னிரெண்டு கண்கள்!!//

    அருமை அருமை
    மனம் தொட்ட கவிதை
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
  2. அருமை வரிகள்... வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  3. நன்றி ரமணி / தனபாலன்

    ReplyDelete