Tuesday, October 2, 2012

உதட்டோரப் புன்னகை!!


உன்னுடைய நினைவுகளால்
உள்ளம் நிறைந்திருக்கும்
உன்னத பொழுதுகளில்
உதட்டோரப் புன்னகை
என்னையும் அறியாமல்….

திரும்ப கிடைக்குமா
நினைவுகளுக்கு காரணமான
மணித் துளிகள் ?
ஏக்கத்தில் மனது…

முன்னே நாமிருந்த
பரவச நிலைக்கு
இனிய பயணமாய்
மீண்டும் மீண்டும்…

உணர்வின் பரிமாற்றம்
விழிகளின் வாயிலாய்…
ஏகாந்த நிலையில்
இருவரும் ஒருவராய்!

இமையின் சுமையை
இறக்கிய தருனத்தில்
உண்மையை உணர்ந்தேன்…
உதட்டோரப் புன்னகை
என்னையும் அறியாமல்….

கனவிலும் நீ….
அருகிலும் நீ!

3 comments:

  1. ரசிக்க வைக்கும் அழகிய உணர்வுகள்...

    ReplyDelete
  2. அருமை அருமை
    மெல்லிய காதல் உணர்வைச் சொல்லிப்போனவிதம்
    மனம் கவர்ந்தது
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
  3. நன்றி தனபாலன் / Ramani...

    ReplyDelete