Wednesday, October 3, 2012

உயர்வின் வாசம்!!


அடுத்தவர் மேன்மையை
அ முதல் ஃ வரை
அலசிடும் உயிரினமாய்…
மனிதத்தின் மனப்போக்கு….

தன்னை தாழ்த்தி
தன்மானம் அழித்து
தரம் குறைந்து
தடுக்கி விழுந்து…

இளப்பமில்லை
எவர்க்கும் எந்நாளும்
எழுவாய் என்னினமே…
நவிரம் தவிர்ப்பாய்…

உணர்ந்திடு முழுமையாய்
உள்ளார்ந்த தகுதியை…
உன்னை வரவேற்கும்
உயர்வின் வாசம்!!

3 comments:

  1. உண்மையின் வரிகள்... அருமை நண்பரே...

    ReplyDelete
  2. நன்றி தனபாலன் / சௌந்தர்

    ReplyDelete