Thursday, October 18, 2012

இதய விமோசனம்!!


உன் வாயிலிருந்து
உதிர்ந்த சொற்களை
பூக்கள் என்றேன்
ஒன்று சேர்த்தேன்
மாலையாய் கவிதை…

வாடாத மாலையை
உள்ளத்தில் உருவகிக்கும்
உன் நினைவுகளுக்கு
அலங்கரித்தேன்….
நிதர்சனமானது நின் நினைவுகள்!!

ஆதர்சனமான நிதர்சனம்
அரங்கேறிய தருனம்
இன்றும் தொடர…
விழிகளின் விமர்சனத்தில்
இதயத்திற்கு விமோசனம்!!

2 comments:

  1. நன்றாக முடித்துள்ளீர்கள்... அருமை...

    ReplyDelete
  2. நன்றி தனபாலன்...

    ReplyDelete