Sunday, September 30, 2012

காதலாய் லயித்து


உன்னுடன் நான்…
என்னுடன் நீ…
மொழிந்தன கண்கள்
உள்ளத்தின் வழிமொழிதலோடு
பிரமிப்பூட்டியது
புரிதல் கலந்த அன்பு!

வார்த்தை கற்களால்
செதுக்க முயன்று
சிற்பியாய் தோல்வி!
உறவின் உணர்வை
சிலையாய் சிறையில் ?

வாழ்க்கையின் போக்கில்
உறவில் விரிசல்
இருவரில் ஒருவரால்…
இயற்கையின் இம்சை!
விரிசலின் உச்சம்
இதயத்தில் பிளவு…

உடைந்த மனதின்
ஒவ்வொரு கூறிலும்
அன்பு நெஞ்சை
அனைக்கும் வலி
காதலாய் லயித்து
காதலாகவே…..

5 comments: