Tuesday, September 18, 2012

காரணிக்கு தீர்ப்பு....


 
 
கடமையில் தடுமாற்றம்…
நியாயம் கற்பிக்க
முகாந்தரம் தேடும்
முழுமையான பிடிவாதம்!

தன்தவறை காக்க
தர்க்கரீதி சொற்கள்
தவறாத தேவை…
காரணத்தின் ஆராய்ச்சி!

காரணி கிடைக்காமல்
காத்திருக்கும் காலத்தில்
ஏதாகும் பொய் பேசினால் ?
எண்ணங்கள் மனதளவில்…

எண்ணத்தின் வெற்றி
மெய்யை புறந்தள்ளும்
புரட்டான நடிப்பு
குடியேறும் அகத்தில்…

குடியேறியது கபடனானதால்
கிருமிகள் நஞ்சாய்
தலை விரித்தாடும்..
கூகிளில் காரணிகளுடன்...

கூகிளில் தேடி
கருமத்தை காத்திட
காரணிக்கு தீர்ப்பு
மரணம்…..
மேல்முறையீட்டின் உரிமையின்றி….

6 comments:

  1. வித்தியாசமான சிந்தனை வரிகள்...

    ReplyDelete
  2. புதிய பின்புல அட்டை நன்றாக இருக்கிறது நண்பரே!

    BTW, கவிதை அருமை!

    ReplyDelete
  3. நன்றி தனபாலன் / வரலாற்று சுவடுகள்....

    ReplyDelete
  4. நன்று.
    இன்று என் தளத்தில் “பைத்தியம் தெளிவதில்லை”

    ReplyDelete
  5. சிந்தனைக் கரு எனக்குப் பிடிபடவில்லை !

    ReplyDelete
  6. @ஹேமா - நம் கடமையைச் செய்யாமலிருக்க பல சமயங்களில் காரணத்தைத் தேடுகிறோம். அந்த காரணத்தை அழிக்க வேண்டும்... அந்த காரணங்கள் வாழ்வின் வளர்ச்சிக்கு தடையாய் நிற்கும் என்பதே கரு...

    ReplyDelete