Monday, September 17, 2012

சுவாசமே நீ!!


காலம் கரைத்த
சுகம்
என்னுள் முழுவதுமாய்
உன்னாலே உன்னாலே!

உன்னுடன் இருக்கும்
உன்னதமான மணித்துளிகளை
மறவாது மாற்றிடுவேன்
நீங்காத நினைவுகளாய்!

என்னுடன் நீயில்லா
நொடியைத் தேடி
தோற்றுவிட்டேன் தேடலில்…
அதோடு உன்னிடமும்!

நீயின்றி நானா??
அதெப்படி ?
சேமித்த உன் நினைவுகளால்
சுவாசமே நீதானே!!

7 comments:

  1. உன்னுடன் இருக்கும்
    உன்னதமான மணித்துளிகளை
    மறவாது மாற்றிடுவேன்
    நீங்காத நினைவுகளாய்!
    nice

    ReplyDelete
  2. தேவையான சுவாசம் தான்.

    ReplyDelete
  3. அருமை அருமை
    மனம் தொட்ட பதிவு
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
  4. நல்ல வரிகள்... அப்படித் தான் எப்போதும் இருக்க வேண்டும்...

    ReplyDelete
  5. பின்னூட்டங்களுக்கு நன்றி - ரஜினி, அருணா, Ramani, தனபாலன்

    ReplyDelete
  6. அற்புதமான வரிகள். தொடர்ந்து எழுதுங்க..நாங்களும் பின் தொடர்கிறோம்

    ReplyDelete
  7. மிகவும் நன்றி @ Semmalai Akash

    ReplyDelete