Sunday, September 23, 2012

காதல் மொழி


உன் உயிர் நான்
என்னை கேட்காமலே
உனதாக்கிவிடு
என்னை!
என்ன தயக்கம் ?
கண்களால் கேட்டாய்…

என்னை நானே
எனதாக்குவது எப்படி ?
நீ தானே நான்….
எண்ண ஒட்டம்…

புருவம் உயர்த்தி
புரிதலோடு புன்சிரித்தாய்…
அர்த்தம் அறிந்தேன்
அதை நீயும் உணர்ந்தாய்…

அடுத்தது என்ன?
ஒன்றும் புரியாமல்
இருவரும் இருந்தோம்…
மௌனமாய் பேசிக்கொண்டே...

மனதை படித்து
விழி பேசும்
உன்னதமான
காதல் மொழியில்
உருக்கமாய் லயித்து!

2 comments: