Sunday, September 2, 2012

விடியலை நோக்கி!!


கதை கேட்கும்
குழந்தையிடம்
கதைக்க நேரமின்றி
கதையடிக்கிறோம்…
சொல்லாமல் இருக்க….
கதை சொல்லாதிருக்க….

சேமித்ததாய் நினைத்த
நேரமும் காலமும்
தொலைவில் காட்சிதரும்
தொல்லைக் காட்சியில்
விரயம்!

விரைவில் நிலை மாறும்
நாளை கண்டிப்பாக….
விசும்பலோடு உறங்கிய
பிஞ்சு மனதில்
விடியலை நோக்கிய
நம்பிக்கை!

6 comments:

  1. //தொலைவில் காட்சிதரும்
    தொல்லைக் காட்சியில்
    விரயம்!//

    உண்மை

    ReplyDelete
  2. நன்றாக முடித்துள்ளீர்கள் சார்...

    /// கதையடிக்கிறோம்…
    சொல்லாமல் இருக்க….
    கதை சொல்லாதிருக்க….///

    அருமை...

    ReplyDelete
  3. விரைவில் நிலை மாறட்டும்...

    ReplyDelete
  4. கதை கேட்கும்
    குழந்தையிடம்
    கதைக்க நேரமின்றி
    கதையடிக்கிறோம்

    யதார்த்தம் சொல்லும் வரிகள்

    ReplyDelete
  5. மிகச் சரி
    நம்மிடம் குழந்தைகளிடம் சொல்லும்படியான
    கதைகள் இல்லாதிருப்பதும் அதற்கான
    நேரமும் பொறுமையும் இல்லாதிருப்பதே
    ஒரு வெட்கக்கேடான் விஷயம்தான்
    அதை நாசூக்காகச் சொல்லிப்போகும்
    கவிதை மிக மிக அருமை
    மனம் கவர்ந்த பதிவு
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
  6. ரமணி ஐயா கருத்தை வழிமொழிகிறேன், இப்போதெல்லாம் யாருக்கு கதை தெரிகிறது குழந்தைக்கு சொல்ல!

    ReplyDelete