Tuesday, September 11, 2012

நெஞ்சினில் நிஜமாய்!!


உன்னுடன் இருக்கும்
உன்னத நிமிடங்களில்
உச்சரிக்க தயங்கும்
உதடு…
பிரிய மனமின்றி!!

நீ இல்லாத
இரவின் மடியில்
இரக்கமின்றி மூடுவதில்லை
இமை…
கண்ணுக்குள் நீ!!

காதலான மொழி
கவிதையாய் கேட்டிட
பேச வேண்டாம்….
நெஞ்சினில் நிறைந்திரு
நினைவாய் இல்லை…
நிஜமாய்!!

8 comments:

  1. நல்லா இருக்கு !!

    நிஜமாய் ஆக என் வாழ்த்துக்கள் :)

    ReplyDelete
  2. @ kousalya / வரலாற்று சுவடுகள் / தனபாலன் - நன்றி!

    ReplyDelete
  3. அருமையான காதல் கவிதை
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
  4. நன்றி @ சௌந்தர்

    ReplyDelete